ஜனாதிபதி அநுர தொடர்பான காணொளி குறித்து வெளியான தகவல்
வெலிக்கடை சிறைச்சாலையின் சமையலறையை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பார்வையிட்டதாக சமூக ஊடகங்களில் பரவிவரும் காணொளி போலியானது என சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அண்மையில் வெலிக்கடை சிறைச்சாலைக்கோ அல்லது வேறு எந்த சிறைச்சாலைக்கோ கண்காணிப்பு விஜயம் மேற்கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலை கண்காணிப்பு
சிறைச்சாலைகளில் பதிவு செய்தாலோ அல்லது காட்சிகளை எடுத்தாலோ, சிறைத் தலைமையகத்தில் சிறப்பு அனுமதி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான காணொளி காட்சிகளை பெறுவதற்கு எந்தவொரு ஊடக நிறுவனமும் அனுமதி பெறவில்லை எனவும், படப்பிடிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை எனவும் சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.





ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 19 மணி நேரம் முன்

சிறகடிக்க ஆசை வெற்றி வசந்த் மனைவிக்கு என்ன ஆச்சு.. கதறி அழும் பொன்னி சீரியல் வைஷ்ணவி.. வைரல் வீடியோ Cineulagam

ரஷ்யாவில் கொல்லப்பட்ட வட கொரிய வீரர்கள் குடும்பங்களுக்கு... கிம் ஜோங் உன் அளித்த உறுதி News Lankasri

முத்து போட்ட ஸ்கெட்ச்.. சீதாவிடம் வசமாக சிக்கிய அருண்! சிறகடிக்க ஆசையில் அடுத்து நடக்கப்போவது இதுதான் Cineulagam
