அரிசி ஆலை உரிமையாளர்களுடன் ஜனாதிபதி விசேட கலந்துரையாடல்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கும் (Anura Kumara Dissanayake) சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இக்கலந்துரையாடலானது, நேற்று (02) ஜனாதிபதி செயலகத்தில் நடத்தப்பட்டுள்ளது.
இந்தக் கலந்துரையாடலின் போது, எதிர்வரும் மாதங்களில் நுகர்வோருக்கு தொடர்ச்சியான மற்றும் மலிவு விலையில் அரிசி வழங்கப்படுவதை உறுதிசெய்வதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
உடனடி நடவடிக்கைகளை
இந்த இலக்கை அடைவதற்கு தேவையான உடனடி நடவடிக்கைகளை அடையாளம் காணுமாறு அவர் ஆலை உரிமையாளர்களை கேட்டுக்கொண்டார்.
மேலும், அரிசி தட்டுப்பாட்டைத் தடுக்கவும், நிலையான அரிசி விநியோகத்தை உறுதி செய்யவும் நாடு முழுவதும் சேமிப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் இந்தக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், உர மானிய விநியோகத்தை சீரமைக்கவும் உள்நாட்டு விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும் QR குறியீடு முறையை அறிமுகப்படுத்துவதன் சாத்தியமான நன்மைகளை ஜனாதிபதி இதன்போது எடுத்துரைத்துள்ளார்.




போர் தொடர்பில் அப்படியே பலிக்கும் பாபா வங்காவின் கணிப்பு - ஈரான் இஸ்ரேல் போரில் வெற்றி யாருக்கு? News Lankasri

வெறும் 4 துணிகள் தான் உள்ளது, அப்பா, அம்மா இல்லாமல்.. சரிகமப சீசன் 5 மேடையில் கண்ணீர்விட்ட இலங்கை பெண் சினேகா Cineulagam

பாகிஸ்தான், சீனாவிற்கு கெட்ட செய்தி... இந்திய ஆயுதப் படை சொந்தமாக்கவிருக்கும் ஆபத்தான ட்ரோன் News Lankasri

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க காதல் திருமணம் தான் செய்வார்களாம்.. யாராலும் தடுக்க முடியாது! Manithan
