சரியான பாதையில் செல்லும் அரசாங்கம் : ரவி கருணாநாயக்க தெரிவிப்பு
தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
சிங்கள மொழி தனியார் வானொலியொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வாகன இறக்குமதி விடயம்
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதிகாரத்துக்கு வர முன்னர் பல்வேறு விடயங்களை கூறியிருந்தது.
ஆனால் அதிகாரத்துக்கு வந்த பின்னர் இதற்கு முந்திய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் உள்ளிட்ட முன்னைய அரசாங்கங்கள் கடைப்பிடித்த அதே வழியிலேயே பயணிக்கின்றது.
அந்த வகையில் அரசாங்கம் இப்போது சரியான பாதையில் சென்று கொண்டிருக்கின்றது.
அதே வேளை, வாகன இறக்குமதி விடயம் அவதானமாக கையாளப்பட வேண்டும். அரசாங்கத்துக்கு உரிய வரி கிடைக்கும் அதே வேளை அந்நிய செலாவணி கையிருப்பு பாதிக்காத வகையிலும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் ரவி கருணாநாயக்க தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan
