சரியான பாதையில் செல்லும் அரசாங்கம் : ரவி கருணாநாயக்க தெரிவிப்பு
தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
சிங்கள மொழி தனியார் வானொலியொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வாகன இறக்குமதி விடயம்
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதிகாரத்துக்கு வர முன்னர் பல்வேறு விடயங்களை கூறியிருந்தது.
ஆனால் அதிகாரத்துக்கு வந்த பின்னர் இதற்கு முந்திய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் உள்ளிட்ட முன்னைய அரசாங்கங்கள் கடைப்பிடித்த அதே வழியிலேயே பயணிக்கின்றது.

அந்த வகையில் அரசாங்கம் இப்போது சரியான பாதையில் சென்று கொண்டிருக்கின்றது.
அதே வேளை, வாகன இறக்குமதி விடயம் அவதானமாக கையாளப்பட வேண்டும். அரசாங்கத்துக்கு உரிய வரி கிடைக்கும் அதே வேளை அந்நிய செலாவணி கையிருப்பு பாதிக்காத வகையிலும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் ரவி கருணாநாயக்க தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan