தமிழர் பகுதிக்குள் நுழைய தயாரான பிக்குகள்: திட்டத்தை அறிந்த அநுர அரசு..
திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தையடுத்து தற்போது மட்டக்களப்பில் தொல்பொருள் இடங்களை அடையாளப்படுத்தும் வகையில் சில பதாதைகளை தொங்கவிட்டிருந்த விடயமானது பேசுபொருளாகியுள்ளது.
இதற்கு பிரதேச சபையிடம் அனுமதி பெறவில்லையென்ற கருத்தும் கூறப்படுகின்றது, அதனையடுத்து சில பதாதைகள் அகற்றப்பட்டுள்ளன.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தொல்பொருள் இடங்களுக்கு பார்வையாளர்களை வழிநடத்தும் பல அறிவிப்பு பலகைகள் அகற்றப்பட்டமை தொடர்பில் உடனடியாக விசாரணைகள் இடம்பெற வேண்டும் என புத்தசாசன மற்றும் மதவிவகார அமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தென்னிலங்கையிலிருந்து ஆயிரத்திற்கு மேற்பட்ட பிக்குகள் இந்த பகுதிகளுக்கு செல்வதற்கு தயாராக இருந்ததை அறிந்த அரசு இவ்வாறு செய்ததாகவும் புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தவிடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..