ஐக்கிய மக்கள் சக்தியுடனான விவாதத்திற்கு மீண்டும் நாள் குறித்த அனுர
சஜித் பிரேமதாசவுடனான(Sajith Premadasa) விவாதத்திற்காக மே 20 ஆம் திகதிக்கு முன்னர் திகதியை வழங்குமாறு தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayake), ஐக்கிய மக்கள் சக்தியிடம் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் நேற்று (01) இடம்பெற்ற மே தின பேரணியில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஊழல் ஆட்சியாளர்கள்
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இந்த மே தின பேரணியே ஊழல் ஆட்சியாளர்களின் கீழ் தேசிய மக்கள் சக்தி நடத்தும் இறுதி மே தின பேரணியாகும்.

ஐக்கிய மக்கள் சக்தியினர் விவாதத்திற்கு அழைத்தனர். அதற்கு 4 நாட்கள் கொடுத்தோம். 4 நாட்களும் அவர்களுக்கு வேலையாம் எனவே மே 20க்கு முன்னர் விவாத்திற்கான நாளை ஒதுக்குமாறு கோருகிறோம்.
இந்த காலப்பகுதியில் எந்தவொரு நாளிலும் விவாதத்திற்கு நாங்கள் தயார் என்றும் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
கடைசி போட்டியில் இமாலய வெற்றி! மீண்டும் உலகக்கிண்ணத்திற்கு தயாராக வருவோம் - ரஷித் கான் News Lankasri
மயில் அனுப்பிய மெசேஜ், கடுப்பான செந்தில் மீனாவிற்கு கொடுத்த வார்னிங்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan