பாகிஸ்தானின் அறிவிப்பில் அநுரவின் பிதற்றல்கள்.. விமர்சிக்கும் நாமல் தரப்பு
நேற்றைய தினம், பாகிஸ்தானிய பிரதமருடன் ஜனாதிபதி அநுர அழைப்பினை மேற்கொண்டு அந்நாட்டு ஆண்கள் அணியை இந்தியாவுடனான போட்டியில் விளையாட அனுமதிக்குமாறு கோரியிருந்தார்.
இதனை தொடர்ந்து, பாகிஸ்தானிய கிரிக்கெட் சபை மேற்கொண்ட பல்வேறு ஆய்வுகள் மற்றும் கலந்துரையாடல்களுக்கு பின்னர், விளையாட அனுமதி வழங்கப்பட்டது.
இது தொடர்பில், பாகிஸ்தானிய அரசாங்கம் விடுத்திருந்த அறிவிப்பில் ஜனாதிபதி அநுரவிற்கு நன்றி தெரிவித்திருந்ததோடு ஜனாதிபதி அநுரவும் தனது உத்தியோகபூர்வ நன்றியை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அநுரவின் தலையீட்டால் இந்த தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் இதில் அநுர தரப்பு தற்பெருமை காண்பித்து வருவதாகவும் எதிர்க்கட்சிகளின் தரப்பிலிருந்தும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றது.
இவ்விடயங்கள் உள்ளிட்ட பல அரசியல் நகர்வுகளை ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,