என்டிபயோட்டிக் பயன்பாடு : எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்

Sri Lanka Sri Lankan Peoples Medicines
By Sivaa Mayuri Dec 10, 2024 04:52 AM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

in சமூகம்
Report
Courtesy: Sivaa Mayuri

என்டிபயோட்டிக் (Antibiotic) என்ற நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் தேவையற்ற மற்றும் தவறான பயன்பாடு, மனித உடலுக்கு குறிப்பிடத்தக்க தீங்கு விளைவிக்கும் என்பதுடன் அவை மருந்துகளின் செயல்திறனைக் குறைக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நுண்ணுயிர் எதிர்ப்பிகள் தொடர்பில், தமது கருத்தை இலங்கை சுகாதார அமைச்சின் மூன்றாம் நிலை பராமரிப்பு சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் பிரியந்த அத்தபத்து வெளியிட்டுள்ளார்.

யாழில் தாயையும் மகனையும் தாக்கிய சந்தேகநபர் கைது

யாழில் தாயையும் மகனையும் தாக்கிய சந்தேகநபர் கைது

என்டிபயோடிக் சிகிச்சையின் ஆரம்பம்

என்டிபயோடிக் எதிர்ப்பு என்பது நுண்ணுயிரிகளான பக்டீரியா, வைரஸ்கள், பூஞ்சை மற்றும் ஒட்டுண்ணிகளை எதிர்த்துப் போராட வடிவமைக்கப்பட்ட மருந்துகளின் செயல்திறன் குறைந்து வருவதைக் குறிக்கிறது.

என்டிபயோட்டிக் பயன்பாடு : எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள் | Antibiotic Use Doctors Warn

இந்த மருந்துகள் தவறாகப் பயன்படுத்தப்படும்போது, நுண்ணுயிரிகள் எதிர்ப்பை வளர்த்து, மருந்துகளை பயனற்றதாக்கி, ஆரோக்கிய சவால்களை அதிகமாக்கின்றன.

1928 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டு 1944 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பென்சிலின் என்ற முதல் என்டிபயோடிக், என்டிபயோடிக் சிகிச்சையின் ஆரம்பத்தை குறிப்பதாக அத்தபத்து குறிப்பிட்டுள்ளார்.

அப்போதிருந்து, பல நுண்ணுயிர் எதிர்ப்பிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இருப்பினும், அதிக செலவுகள் காரணமாக , அவற்றின் உற்பத்தியில் முன்னேற்றம் கணிசமாக குறைந்தது.

2017 மற்றும் 2023 க்கு இடையில் 10 புதிய நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டன.

இதற்கிடையில், நுண்ணுயிரியல் சிறப்பு மருத்துவர்களின் சங்கத்தின் தலைவர் சுஜாதா பத்திரகே, என்டிபயோடிக்கின் அபாயகரமான போக்கை எடுத்துக்காட்டியுள்ளதோடு, என்டிபயோடிக் பயன்பாட்டின் முக்கியத்துவத்தையும், தவறான பயன்பாட்டைத் தடுப்பதில் மருத்துவ நிபுணர்களின் பங்கையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மருந்துகளின் பக்க விளைவுகள்

எல்லா நோய்களுக்கும் மருந்து தேவைப்படாது. அவற்றுக்கு பல்வேறு சிகிச்சைகள் உள்ளன.

எனினும் துரதிஸ்டவசமாக, விரைவான மீட்புக்கான முயற்சியில் பலர் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை தவறாகப் பயன்படுத்துகின்றனர்

என்டிபயோட்டிக் பயன்பாடு : எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள் | Antibiotic Use Doctors Warn

எனவே மருந்துகளின் சாத்தியமான பக்க விளைவுகளை கருத்தில் கொள்ளுமாறு அவர் நோயாளிகளை வலியுறுத்தியுள்ளார்.

மூளை, இதயம், சிறுநீரகம் மற்றும் கல்லீரலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு உட்பட, மருந்தை தவறாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் அபாயங்களை நோயாளிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

அதேநேரம், நோயாளிகள் உடனடி நிவாரணம் கோரும் நிலையிலும், முறையான அடிப்படையில் சிகிச்சை அளிக்க வேண்டிய கடமை மருத்துவர்களுக்கும் உண்டு என்று நுண்ணுயிரியல் சிறப்பு மருத்துவர்களின் சங்கத்தின் தலைவர் சுஜாதா பத்திரகே சுட்டிக்காட்டியுள்ளார்.  

வவுனியாவில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபரை கைது செய்த போது குழப்ப நிலை : மேலும் இருவர் கைது

வவுனியாவில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபரை கைது செய்த போது குழப்ப நிலை : மேலும் இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்ட நபர் மடக்கிப் பிடிப்பு

யாழ்ப்பாணத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்ட நபர் மடக்கிப் பிடிப்பு

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW     
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US