பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலாக கொண்டுவரப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் பொது மக்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்துவதற்கு வழிகோலுவதாக பேராசிரியர் ஜயதேவ உயங்கொட எச்சரித்துள்ளார்.
ஜனநாயக விரோத வழிகளில் ஒன்று
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்கும் வகையில், சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை செயல்படுத்துவதற்காக, ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்கள் மீது அரசாங்கம் சுமையை சுமத்தியுள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும் இது நாட்டில் ஒரு தீவிரமான சமூகப் பிரச்சினைக்கு வழிவகுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களால் ஆரம்பிக்கப்படும் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை ஆளும்
தரப்பினர் நசுக்குவதற்காக மற்றும் கருத்து வேறுபாடுகளை ஒடுக்க அரசாங்கம்
அறிமுகப்படுத்தும் ஜனநாயக விரோத வழிகளில் ஒன்றே பயங்கரவாத எதிர்ப்பு யோசனை
என்றும் அவர் கூறியுள்ளார்.
