இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல்: உதய கம்மன்பில எச்சரிக்கை - செய்திகளின் தொகுப்பு
இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும் வகையில் மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.
13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக கடந்த ஆண்டு நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.
இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டால், வடக்கு மாகாண பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் எதிர்காலத்தில் பிரிவினை யுத்தம் ஏற்படும் என அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது தெரிவித்துள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |