வெளிநாடொன்றில் கொடூரமாக அடித்து துன்புறுத்தப்பட்டுள்ள இலங்கை பெண்! வெளியான அதிர்ச்சி தகவல்
குவைத்தில் சுமார் 4 வருடங்களாக வீடொன்றில் பணிப்பெண்ணாக இருந்த இலங்கை பெண் ஒருவர் உடல் ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு, தாக்குதலுக்கு உள்ளானதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் குவைத் பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கியை வைத்து மிரட்டல்
குவைத்தில் குறித்த வீட்டின் உரிமையாளரான பெண் மற்றும் அவரது இரண்டு மகன்களால், உடல் மற்றும் தலையில் தாக்கப்பட்டதால் தான் பலத்த காயங்களுக்கு ஆளாகியிருப்பதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.
வீட்டின் உரிமையாளர்கள் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை தன்னை அடித்து துன்புறுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமன்றி வாயில் துப்பாக்கியை வைத்து மிரட்டி தாக்குதலுக்குள்ளானதை எந்த வகையிலும் பொலிஸாரிடம் சொல்ல வேண்டாம் என்று கூறியதாக அப்பெண் தெரிவித்துள்ளார்.
பெண் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு
பின்னர் வாகனத்தில் ஏற்றிச்சென்று ஓரிடத்தில் தன்னை கைவிட்டுச் சென்றதாகவும் தாக்குதலுக்கு உள்ளான பெண் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து குறித்த பெண்ணின் இலங்கை நண்பர்கள் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த சம்பவம் தொடர்பில் குவைத்தில் உள்ள இலங்கை தூதரகமோ அல்லது வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகமோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குறித்த பெண் குற்றம்சாட்டியுள்ளார்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri

இந்தியாவின் மிகவும் படித்த அரசியல்வாதி.., ஐஏஎஸ் வேலையை விட்டுவிட்டு இளம் வயதிலேயே இறந்த நபர் யார்? News Lankasri
