இல்லத்தரசிகளுக்கு மற்றுமொரு அதிர்ச்சி தகவல் - செய்திகளின் தொகுப்பு
கடந்த மாதமே விலை அதிகரிப்பு செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் விலை அதிகரிப்பைக் கோரியுள்ளது லாப்ஸ் நிறுவனம்.
கடந்த மாதம் 12.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 363ரூபாவினால் அதிகரிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் மீண்டும் 12.5 கிலோ கிராம் எடைகொண்ட காஸ் சிலிண்டரின் விலையை 291 ரூபாவில் அதிகரிக்க வேண்டும் என லாப்ஸ் நிறுவனம் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த கோரிக்கைக்கு அரசாங்கம் அனுமதியளித்தால் லாப்ஸ் சிலிண்டரின் புதிய விலையாக 2147 ரூபா காணப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை இணைத்து வருகிறது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,