தரமற்ற மருந்துப் பொருள் இறக்குமதி மோசடி தொடர்பில் இன்னுமொருவர் கைது
இலங்கை தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின்(Keheliya Rambukwella) பதவிக் காலத்தில் நடைபெற்ற மனித பாவனைக்குதவாத மனித இம்யூனோகுளோபுலின் உள்ளிட்ட தரமற்ற மருந்துப் பொருள் இறக்குமதி தொடர்பில இலங்கை தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியான மருத்துவர் விஜித் குணசேகரவே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
நீண்ட விசாரணை
தரமற்ற மருந்துப் பொருள் இறக்குமதி தொடர்பில் இன்று(08) காலை தொடக்கம் சுமார் பத்து மணிநேரம் அளவில் அவரிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்கள பொலிஸார் நீண்ட விசாரணையொன்றை மேற்கொண்டிருந்தனர்.
அதன் முடிவில் குறித்த சம்பவத்துடன் இலங்கை தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியானமருத்துவர் விஜித் குணசேகரவுக்கும் தொடர்பு இருப்பதாக நம்பகமான சாட்சியங்கள் கிடைத்திருந்த நிலையில் அவர் தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்கள பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட மருத்துவர் விஜிக் குணசேகரவை நாளை மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள பொலிஸார் அறிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கடைசி டெஸ்டில் ஏஞ்சலோ மேத்யூஸ்! நீ உன் தேசத்திற்கு உண்மையான சேவகன் - ரோஹித் ஷர்மா பிரியாவிடை News Lankasri

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்... நடிப்பவர்கள் யார் யார் பாருங்க Cineulagam

மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கும் புதிய தொடர்... கமிட்டான சூப்பர் புதிய ஜோடி, யார் பாருங்க Cineulagam
