பெரும் அச்சுறுத்தலாகியுள்ள கோவிட் தொற்றின் புதிய மாறுபாடு! - அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு
தென்னாப்பிரிக்காவில் தற்போது வேகமாக பரவி வரும் கோவிட் -19 தொற்றின் சி .1.2 என அடையாளம் காணப்பட்ட மாறுபாடு சில முந்தைய விகாரங்களால் உருவானது என்று சோதனைகள் வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண இதனை தெரிவித்துள்ளார்.
மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, தென்னாப்பிரிக்காவில் பரவத் தொடங்கிய உலக சுகாதார அமைப்பினால் பெயரிடப்படாத தற்போதைய மாறுபாடு, சீனா, நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, போர்ச்சுகல், காங்கோ மற்றும் மொரிஷியஸ் போன்ற நாடுகளிலும் பரவத் தொடங்கியுள்ளது.
தற்போதைய மாறுபாடு மனித உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை சமாளிக்க வல்லது என்று பல மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவித்ததாக அமைச்சர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், இந்த மாறுபாடு நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் ஏற்கனவே எடுத்துள்ளது என்று அமைச்சர் வலியுறுத்தினார்.
சர்வதேச தொடரில் விளையாடுவதற்காக இலங்கை வந்துள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் பிசிஆர் சோதனைகள் ஸ்ரீ ஜயவர்த்தனபுரா பல்கலைக்கழகத்தின் ஒரு குழுவினால் நடத்தப்பட்டுள்ளது.
அனைவரும் எதிர்மறையான முடிவுகளை அளித்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
கோவிட் வைரஸின் டெல்டா மாறுபாடு பரவுவது, இதுவரையில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட தடுப்பூசி இயக்கத்தில் எந்தவிதமான பாதகமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று” அவர் மேலும் கூறியுள்ளார்.

இந்தியாவில் ஒரு வாரமாக நிற்கும் F-35B போர் விமானம் - புதிய Royal Navy குழுவை அனுப்பும் பிரித்தானியா News Lankasri
