கனடாவில் மற்றுமொரு படுகொலை : இருவர் பலி
கனடாவின் டொரன்டோவிலுள்ள Regent Park பகுதியில், இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு பொலிஸாரும் மருத்துவ உதவிக்குழுவினரும் சென்றபோது இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் துப்பாக்கியால் சுடப்பட்டு காயமடைந்த நிலையில் கிடப்பதைக் கண்டுள்ளனர்.
காயமடைந்த ஆண்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்ற இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.

மருத்துவமனையில், சிகிச்சை பலனின்றி இரண்டாவது ஆணும் உயிரிழந்துவிட்ட நிலையில் மற்ற பெண்ணின் உயிருக்கு ஆபத்து இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உறவினர்கள்
இதற்கிடையில், சம்பவ இடத்திலிருந்து தாக்குதல்தாரி தப்பியோடுவதைக் கண்ட பொலிஸார் அவரைத் துரத்த, பொலிஸாரையும் குறித்த சந்தேகநபர் தாக்கியுள்ளார். இருப்பினும் குறித்த நபரை பொலிஸார் மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர்.

இதேவேளை பெயர் முதலான எந்த விவரங்களையும் இப்போதைக்கு வெளியிட இயலாது என்று கூறியுள்ள பொலிஸார், தாக்கப்பட்டவர்களும் தாக்குதல்தாரியும் உறவினர்கள் என தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
148 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளோம் - நேபாளத்திலிருந்து வீடியோ வெளியிட்ட தேச மங்கையற்கரசி News Lankasri
தண்ணீர் மற்றும் டின் உணவுகளைச் சேமித்து வைக்குமாறு மக்களுக்கு பிரித்தானியா அறிவுறுத்தல் News Lankasri