கெஹெல்பத்தர பத்மேவுக்கு வழங்கப்பட்ட 14 கிலோ ஐஸ்! தப்பிச் சென்ற மூன்று ஈரானியர்கள்
ஐஸ் போதைப்பொருளை தயாரித்ததாக சந்தேகிக்கப்படும் இன்னொரு வீடு அம்பாந்தோட்டை மயூரபுர பகுதியில் களுத்துறை மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குடு நிலங்கவின் நெருங்கிய கூட்டாளியான எம்பிலிபிட்டிய சுரங்க என்ற நபரை களுத்துறை மாவட்ட குற்றவியல் பிரிவினர் கைது செய்த பின்னரே இந்த வீடு தொடர்பில் தெரியவந்துள்ளது.
பொலிஸாரின் தகவல்
வெல்லவாய, கிரியகொல்லவைச் சேர்ந்த 20 வயதான சம்பத் பண்டார என்ற நபர் தொடர்பில் சுரங்க வழங்கிய தகவலுக்கு அமைய, பாணந்துறை அருக்கொடவில் வைத்து ஐஸ் போதைப்பொருடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மயூரபுர வீடு தொடர்பில் தகவல்களை வழங்கியுள்ளார்.
குறித்த வீட்டில் ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கப்பட்டபோது தாம் அங்கு தங்கியிருந்ததாகவும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இந்த வீட்டில் மூன்று ஈரானியர்கள் ஐஸ் போதைப்பொருளை தயாரித்ததாகவும், பின்னர் கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட தரப்பினருக்கு சுமார் 14 கிலோ ஐஸ் போதைப்பொருளை விற்றதாகவும் சந்தேக நபர் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மூன்று ஈரானியர்கள் இப்போது நாட்டை விட்டு தப்பிச் சென்றுவிட்டதாகவும் சந்தேக நபர் கூறியுள்ளார்.
வீட்டை சோதனையிட்டபோது, ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 52 லிட்டர் ரசாயனங்கள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஒரு அறை ஆய்வகமாக அமைக்கப்பட்டுள்ளதுடன் அங்கிருந்து போதைப்பொருளை தயாரிப்பதற்காக பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சில பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
தயாரிக்கப்பட்ட ஐஸ் போதைப்பொருளை கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் ஒரு மோட்டார் வாகனமும் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.





Ethirneechal: கல்யாண மண்டபத்திற்கு வந்த பார்கவி.. அடுத்த உயிரை காவு வாங்க காத்திருக்கும் அறிவுக்கரசி- கதிர் Manithan
