மற்றுமொரு அதி விசேட வர்த்தமானி வெளியானது!
சேதன, சேதனமற்ற மற்றும் பொஸ்பரஸ் உரங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கும் வகையிலும், கிளைபோசேட் பாவனைக்கு தடை விதிக்கும் வகையிலும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய வெளியிடப்பட்ட வர்த்தமானியின்படி இரசாயன பசளை இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது.
இதற்கு பல்வேறு தரப்பினர்களும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். குறிப்பாக இராசயன பசளை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இரசாயன பசளை இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டை தொடர்ந்து நாட்டில் விவசாய உற்பத்தி வெகுவாக குறைவடைந்ததுடன், காய்கறிகள் உள்ளிட்ட விவசாய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்தது.
இதனையடுத்து விவசாயிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் போராட்டங்களையும் முன்னெடுத்திருந்த நிலையில், இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்தது.
இதன்படி, சுமார் 7 மாதங்களாக இரசாயன பசளை இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை கடந்த மாதம் 24ம் திகதி நீக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே, குறித்த விடயம் தொடர்பிலான விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்து சமுத்திரத்தில் டியாகோ காசியா தனது முக்கியத்துவத்தை இழக்கிறதா..! 20 மணி நேரம் முன்
போர்க்களத்தில் களமிறக்கப்படும் அதி சக்திவாய்ந்த வான் பாதுகாப்பு அமைப்பு! ஈரானின் எச்சரிக்கையினால் மீண்டும் பதற்றம்
மிக நெருக்கமான உச்சத்தால் தீவிர நிலை: தயவு செய்து அவதானமாக இருக்கவும் - பொதுமக்களுக்கு அவசர அறிவுறுத்தல்
பிராந்திய ரீதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தும் தாக்குதல்கள் - குவைத்தில் முக்கிய இடங்களை குறிவைத்து தாக்குதல்
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
வெளிவரப்போகும் குணசேகரன் ஈஸ்வரியை தாக்கிய வீடியோ, எப்படி தெரியுமா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
தமிழ் புத்தாண்டு சிறப்பு திரைப்படம்.. கலைஞர் டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பாகும் முன்னணி ஹீரோவின் படம் Cineulagam