நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு நெருக்கடி
எதிர்காலத்தில் நாடளாவிய ரீதியில் மரக்கறிகளுக்கு பாரியளவில் தட்டுப்பாடு ஏற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை மற்றும் உரத் தட்டுப்பாடு காரணமாக டிசம்பர் மாதத்திற்குள் மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
பேலியகொடையில் உள்ள மெனிங் சந்தைக்கு தினசரி வழங்கப்படும் மரக்கறிகள் 60% குறைந்துள்ளதாக மானிங் மற்றும் அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையங்களின் சங்கத்தின் பொருளாளர் நிமல் அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்திற்கு நாளாந்தம் சுமார் 200,000 கிலோ மரக்கறிகள் கிடைத்து வந்த நிலையில் தற்போது 100,000 கிலோவிற்கும் குறைவாகவே கிடைக்கின்றது. இது 50% குறைப்பு என நுவரெலியா பொருளாதார நிலைய முகாமையாளர் ஆர். தி. பண்டார குறிப்பிட்டுள்ளார்.
கெப்பெட்டிபொல மொத்த பொருளாதார மத்திய நிலையத்திற்கு மரக்கறி விநியோகம் 80 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக கெப்பெட்டிபொல பொருளாதார மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரி சமந்த சூரியகொட தெரிவித்துள்ளார்.
தம்புத்தேகம அர்ப்பணிக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையத்திற்கான மரக்கறி விநியோகமும் சுமார் 75% குறைக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் சுனில் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
வழக்கமாக ஆண்டு இறுதியில் இல்லாத வகையில் இந்த ஆண்டு பொருளாதார மையங்களுக்கு மரக்கறி வரத்து வெகுவாக குறைந்துள்ளது.
இந்நிலை நீடித்தால் மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என நாடளாவிய ரீதியில் உள்ள பொருளாதார நிலையங்களின் வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
