ஜனாதிபதிக்கு மற்றுமொரு ஆலோசகர் :வழங்கப்பட்ட நியமனக் கடிதம்
ஜனாதிபதியின் விசேட ஆலோசகராக முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ (Harin Fernando) நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசியலமைப்பின் கீழ் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசேட ஆலோசகர்
இதன்படி, முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் விசேட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகித்த ஹரின், ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்துக்கு ஆதரவளித்ததன் மூலம் உயர்நீதிமன்றின் தீர்ப்பின்படி, அந்த கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்
இதனையடுத்தே அவருக்கு ஆலோசகர் பதவியை ரணில் விக்கிரமசிங்க வழங்கியுள்ளார்.
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 23 மணி நேரம் முன்
எதிர்நீச்சல் பார்வதி நடித்து வந்த சூப்பர்ஹிட் தொடர் முடிவுக்கு வந்தது... கடைசி நாள் வீடியோ இதோ Cineulagam
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri