இலங்கைக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள கோவிட் தொற்று! இன்றும் 57 மரணங்கள் பதிவானது
இலங்கையில் மேலும் 57 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இலங்கையில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2260 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 பெண்களும், 32 ஆண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, இன்றைய தினம் 2,259 பேர் கோவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் புதுவருட கோவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, கோவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 225,897 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கோவிட் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 188,547 ஆக அதிகரித்துள்ளது.