இலங்கையில் மேலும் 50 பேர் கோவிட் தொற்றுக்கு பலி!
இலங்கையில் மேலும் 50 கோவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் நேற்று (14) உறுதிப்படுத்தப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 29 ஆண்களும் 21 பெண்களும் அடங்குகின்றனர். சுமார் மூன்று வாரங்களின் பின்னர் கோவிட் மரணங்கள் 50ஐ எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
30-க்கும் 59 வயதிற்கும் இடைப்பட்ட 12 பேரும், 60 வயதிற்கு மேற்பட்ட 38 பேரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, நாட்டில் பதிவாகிய கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 3,661 ஆக அதிகரித்துள்ளது. எவ்வாறாயினும், கடந்த 7 நாட்களில் ஒட்டுமொத்தமாக 260 இறப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்று இதுவரை 1,447 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொற்றுக்குள்ளான 2 ,53,953 பேர் குணமடைந்துள்ள நிலையில், 22,979 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.