இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு மேலும் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்?
அரசாங்கம் அண்மையில் பெற்ற கடன்கள் மற்றும் உதவிப் பொதிகளுக்கு மேலதிகமாக மேலும் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியாவிடமிருந்து பெறக் கூடும் என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இன்று கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்திய வெளிவிவகார அமைச்சருடன் கலந்துரையாடியதன் பின்னர் இலங்கைக்கு பாரிய உதவிப் பொதி கிடைத்துள்ளது.
இதற்கு மாற்றாக சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவையும் அரசாங்கம் பெற முடியும்.
தேவைப்படும் நேரத்தில், நேச நாடுகள் இலங்கைக்கு உதவி செய்வதால் நாடு தனிமைப்படுத்தப்படவில்லை அல்லது திவால்நிலையின் விளிம்பில் இல்லை.
அரசாங்கம் பொது வாக்கெடுப்பு நடத்துவதில் கவனம் செலுத்தவில்லை மாறாக அடுத்த மூன்று வருடங்களில் தனது வேலைத்திட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 5 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
