யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவு: தொலைபேசி அழைப்புகளால் அவதியுறும் பேரவை உறுப்பினர்கள்
யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவுக்கான விசேட பேரவை அமர்வு எதிர்வரும் (12.04.2023) ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ளது.
இந்நிலையில், பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்களுக்கு அநாமதேய தொலைபேசி அழைப்புகள் வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பேரவையின் உறுப்பினர்கள் சிலருக்குத் தெரியாத கைத்தொலைபேசி இலக்கங்களில் இருந்து அழைப்பு மேற்கொள்ளப்பட்டு, “நாங்கள் அரச புலனாய்வுச் சேவையில் இருந்து (எஸ்.ஐ.எஸ் ) அழைக்கிறோம்.
இரகசிய அறிக்கை
யார் துணைவேந்தராக வர வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்? ஏன் அவரை விரும்புகிறீர்கள்? நாங்கள் தான் இரகசிய அறிக்கை கொடுக்க வேண்டும்.அதற்காகத் தான் கேக்கிறோம்” என்று பேசப்பட்டதாகப் பேரவை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
தெரிவுக்கான பேரவை நெருங்கி வரும் நேரத்தில் இவ்வாறு அழைக்கப்படுவது நல்லதல்ல என்றும் இதனால் பேரவை உறுப்பினர்கள் சிலர் விசனமடைந்துள்ளனர் என்றும் தெரியவருகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan
