யாழ்.மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு
மின் கட்டணம் தொடர்பில் யாழ்ப்பாண மக்களுக்கு அறிவித்தல் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, யாழ்ப்பாணத்தில், வடமராட்சி மற்றும் தென்மராட்சி பகுதிகளில் 5 ஆயிரம் ரூபாவுக்கு மேல் மின் கட்டணம் நிலுவையில் வைத்திருப்போரின் மின் இணைப்புக்கள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் இணைப்புக்களை துண்டித்தல்
வடமராட்சி – தென்மராட்சி பிரதேசங்களுக்கான மின் பொறியியலாளர் அலுவலகம் இந்த அறிவிப்பை வழங்கியுள்ளது.
எதிர்வரும் 5ஆம் திகதி தொடக்கம் 5 ஆயிரம் ரூபாவுக்கு அதிகமான மின் கட்டண நிலுவை வைத்திருப்போர் அவற்றை செலுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
குற்றப் பணம் 3 ஆயிரம்
மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால் அதனை மீள இணைப்பதற்கு குற்றப் பணம் 3 ஆயிரம்
ரூபா மின் கட்டணத்துக்கு மேலதிகமாக செலுத்த வேண்டும் எனவும் இதன்போது அறிவிக்கப்பட்டுள்ளது.



