மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு
நாளை ஒரு மணிநேரம் மட்டுமே மின்தடை செய்யப்படும் என்று பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு இன்று பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் அசாதாரண நிலை காரணமாக ஏற்பட்டுள்ள மழைவீழ்ச்சியினால் மின்னுற்பத்திக்கான நீர்த்தேக்கங்கள் நிறைந்து வழியத் தொடங்கியுள்ளது.
அதன் காரணமாக நீர்த்தேக்கங்கள் மூலமான மின்னுற்பத்தியில் தற்போதைக்கு உற்பத்தித்திறன் சற்று அதிகரித்துள்ளது.
ஒரு மணிநேர மின்வெட்டு
அதனை முன்னிட்டு நாளைய மின்வெட்டு ஒரு மணிநேரம் மட்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.
நாளைய மின்வெட்டு மாலை நேரத்தில் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்றும் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.