ஜனாதிபதி பதவி தொடர்பில் போராட்டக்கள செயற்பாட்டாளர்களின் அறிவிப்பு-செய்திகளின் தொகுப்பு
13 ஆம் திகதி வரை காத்திருந்து சுபநேரத்தை பார்த்து காலத்தை கழிக்காமல் உடனடியாக இராஜினாமா கடிதங்களை கையளிக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு போராட்டக்கள செயற்பாட்டாளர்கள் முக்கிய அறிவிப்பொன்றினை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது, நாட்டை விட்டு வெளியேறாது சுபநேரத்தை பார்த்துக்கொண்டு பதவி விலகாமல் இன்னும் ஒரு நாள் ஆட்சியில் இருக்க முற்பட்டால், அதற்கு இடமளிக்க முடியாது.
கோட்டாபய ராஜபக்ச சென்றவுடன் ஜனாதிபதி கதிரையில் அமரலாம் என ரணில் ஒருபோதும் நினைக்க முடியாது. ரணிலை ஜனாதிபதி கதிரையில் ஒரு நாளேனும் அமரவிடமாட்டோம்.
ஜனாதிபதி இராஜினாமா கடிதத்தினை கையளிக்கும் வரை மக்களின் கட்டுப்பாட்டிலிருந்து கட்டிடங்கள் விடுவிக்கப்படமாட்டாது.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலைநேர செய்திகளின் தொகுப்பு,
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
உதவி செய்த மீனாவையே பிரச்சனையில் சிக்க வைத்த மயில், என்ன இப்படி பண்ணிட்டாங்க... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
பிரிட்டிஷ் விமானப் படை தளத்தின் மீது தாக்குதல்: அதிநவீன போர்க்கப்பலை அனுப்ப பிரித்தானிய திட்டம் News Lankasri