திருமண நிகழ்வுகள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு!
சுகாதார ஒழுங்கு விதிகளை பின்பற்றாது திருமண நிகழ்வுகளை ஏற்பாடு செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன இதனை தெரிவித்துள்ளார். இதன்படி, நேற்று முதல் திருமண நிகழ்வுகளை பொது சுகாதார பரிசோதகர்கள் மேற்பார்வை செய்யது வருவதாக அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், திருமண நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதன் பின்னர், சுகாதார விதிகளை பின்பற்றாது செயற்பட்டுள்ளமை தொடர்பான நிழ்படங்கள் கிடைத்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கோவிட் ஒழிப்பிற்கான தேசிய செயலணியின் தலைவர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இனிவரும் நாட்களில் நடத்தப்படும் திருமண நிகழ்வுகள் கண்காணிக்கப்பட்டு, தனிமைப்படுத்தல் விதிக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri