இன்றைய வானிலை குறித்து வெளியான அறிவிப்பு
நாட்டின் சில பகுதிகளில் ஒரளவு பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சப்ரகமுவ, மத்திய மாகாணங்களின் சில இடங்களிலும், காலி மாத்தறை களுத்துறை மாவட்டங்களிலும் ஓரளவு பலத்த மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டம் நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



