ராஜிதவுக்கு ஒலிபெருக்கி மூலம் விடுக்கப்பட்ட அறிவிப்பு
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு ஆகஸ்ட் 29ஆம் திகதி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு, ஒலிபெருக்கி மூல அறிவிப்பையும் நீதிமன்ற அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
கொழும்பு நீதிவான் நீதிமன்ற அதிகாரிகள் நேற்று அவரது வீட்டில் எழுத்துப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர்.
ஒலிபெருக்கி மூல அறிவிப்பு
அத்துடன் மாலபே, தலஹேனவில் உள்ள அவரது இல்லத்தில் ஒலிபெருக்கி மூல அறிவிப்பையும் வெளியிட்டனர்.

முன்னதாக, நீதிமன்றத்தைத் தவிர்ப்பதாகக் கூறப்படும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறித்து எழுத்துப்பூர்வ அறிவிப்பை வெளியிடுமாறு கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க லஞ்ச ஒழிப்பு ஆணையத்துக்கு உத்தரவிட்டார்.
அத்துடன் ஆகஸ்ட் 29 ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறும் அவர் உத்தரவிட்டார்.
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri