லங்கா ஐஓசி நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லங்கா ஐஓசி நிறுவனத்தின் எரிபொருள் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக வெளியான செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என லங்கா ஐஓசி தெரிவித்துள்ளது.
எரிப்பொருள் விலை உயர்வு தொடர்பில் இதுவரை எந்த திட்டங்களும் இல்லையென்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை,எரிபொருள் தேவையான வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள் என தெரிவித்து பல தொலைபேசி இலக்கங்களை உள்ளடக்கி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் தகவலில் எந்தவித உண்மையும் இல்லை என லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.