புதிய அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு
தேர்தல் ஆணைக்குழுவில் தங்களை பதிவு செய்து கொள்வதற்காக ஏராளமான புதிய அரசியல் கட்சிகள் விண்ணப்பித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
தற்போதைக்கு சுமார் 70 புதிய அரசியல் கட்சிகள் பதிவுக்காக விண்ணப்பித்துள்ள போதிலும, 30 கட்சிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
போதுமான அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் அவர்கள் ஆதாரங்களை சமர்ப்பிக்க தவறியமை காரணமாகவே அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகைமைகள்

கடந்த நான்கு வருட காலத்தினுள் செயற்பாட்டு ரீதியான அரசியல் பங்களிப்புகள், தேசிய மட்டத்திலான பிரச்சினைகள் தொடர்பில் கருத்துக்களை வௌியிடுதல் மற்றும் அவற்றை சமூகமயப்படுத்தல், கடந்த கால தேர்தல்களில் செயற்பாட்டு ரீதியான பங்களிப்பு என்பன புதிய அரசியல் கட்சிகளுக்கான பதிவுக்கு தேவையான தகைமைகளாக வரையறுக்கப்பட்டுள்ளன.
நேர்முகதேர்வுகள்

இந்நிலையில் மேற்குறித்த தகைமைகளை பூர்த்தி செய்துள்ள 40 அரசியல் கட்சிகளின் விண்ணப்பங்கள் தொடர்பான நேர்முகதேர்வுகள் எதிர்வரும் ஜூலை மாதம் 4 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
ஒரேயடியில் 48 ஈரானியத் தலைவர்கள், 9 கடற்படைக் கப்பல்கள் துவம்சம்: பெருமை பேசும் ட்ரம்ப் News Lankasri
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri