இரண்டாவது அளவை தடுப்பூசி தொடர்பில் உலக சுகாதார மையம் விடுத்துள்ள அறிவித்தல்
எஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளை பெறுபவர்கள் இரண்டாவது அளவை தடுப்பூசியை பெறுவதில் தாமதம் ஏற்பட்டால் தடுப்பூசியின் செலுத்துகையை மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிக்க அவசியமில்லை என்று உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.
எஸ்ட்ராசெனெக்காவின் இரண்டாவது அளவு, முதல் அளவு வழங்கப்பட்டு 8-12 வாரங்களில் பரிந்துரைக்கப்படுகின்றன. எனினும் இலங்கையில் முதல் அளவு செலுத்தப்பட்டு தற்போது 12 வாரங்களும் நிறைவடைந்துள்ளன.
இந்த நிலையில், உலக சுகாதார அமைப்பின் புதுப்பிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் எஸ்ட்ராசெனெகாவின் முதல் மற்றும் இரண்டாம் அளவுகளுக்கு இடையில் ஆறு மாத இடைவெளி இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்ட்ராசெனெகாவின் இரண்டாவது அளவை செலுத்துவதற்கு இலங்கைக்கு 585,000 குப்பி எஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் தேவை. எனினும் போதுமான குப்பிகளை இலங்கை பாதுகாத்து வைக்கவில்லை.
உலக சுகாதார அமைப்பின் குறிப்பின்படி, உற்பத்தி தாமதங்கள், கப்பல் தாமதங்கள் மற்றும் குறிப்பிட்ட எதிர்பாராத நாட்டின் தேவைகள் உள்ளிட்ட பல காரணிகளால் எஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளின் உலகளாவிய வழங்கல் தடைபட்டுள்ளது.
எனவே உலக விநியோக அமைப்பின் 8-12 வார கால அட்டவணையில் kuritha தடுப்பூசியின் இரண்டாவது அளவை செலுத்துவது எதிர்காலத்தில் சாத்தியமில்லை என்பதால் எதிர்கால விநியோகத்தின் நிச்சயமற்ற தன்மை கொள்கை மற்றும் நிரல் தாக்கங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டியேற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொழில்நுட்பக் குறிப்பு உலக சுகாதார அமைப்பின் செயலகத்தால் உருவாக்கப்பட்டது. மற்றும் கோவிட் தடுப்பூசிகள் குறித்த நோய்த்தடுப்பு தொடர்பான நிபுணர்களின் மூலோபாய ஆலோசனைக் குழு மற்றும் பணிக்குழுவின் உறுப்பினர்களால் இது மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.
மூன்றாம் கட்ட மருத்துவ சோதனை தரவுகளின்படி, எஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் முதல் அளவு செலுத்தப்பட்டு 22 நாட்களுக்குப் பின்னரே கோவிட் தொற்றுக்கு எதிரான செயல்திறன் ஆரம்பிக்கின்றது.
இந்த நிலையில் ,முதல் அளவுகளின் செலுத்துகைக்கு பிறகு, மருத்துவமனையில் சேர்ப்பது மற்றும் இறப்பில் 80% க்கும் அதிகமான குறைவு ஏற்பட்டுள்ளது. பிரித்தானியாவில் முதல் அளவுக்கு பிறகு முதல் 6-12 வாரங்களில், மருத்துவமனையில் மற்றும் இறப்புகளில் 80% (95% 36-95%) க்கும் அதிகமான குறைவுகள் பதிவாகின.
இந்த கண்காணிப்பு ஆய்வுகள் இந்த 12 வாரங்களுக்குள்
எஸ்ட்ராசெனெகா தடுப்பூசி, கடுமையான நோய்க்கு எதிரான பாதுகாப்பை
வலுப்படுத்துவதாக உலக சுகாதார அமைப்பின் குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.