லிட்ரோ நிறுவனம் பொது மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
இலங்கையில் எதிர்வரும் 29 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை சந்தைக்கு எரிவாயு விநியோகிக்கப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
முற்பதிவு செய்யப்பட்டுள்ள எரிவாயு அடங்கிய கப்பல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இலங்கையை வந்தடையும் என லிட்ரோ நிறுவன தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் சமையல் எரிவாயு உருளைகளை சந்தைக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

பொது மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
இதன் காரணமாக, எரிவாயுவை பெற்றுக்கொள்வதற்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் இன்றுடன் 5 நாட்களாக வீட்டுப் பாவனைக்கான சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறவில்லை. இதற்கு மாற்று வழியாக, மண்ணெண்ணெய் பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பமும் தற்போது பொதுமக்களுக்கு இல்லாமல் போயுள்ளது.இதன் காரணமாக நகர் பகுதி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
இதேவேளை, எரிவாயுவினை பெறுவதற்கான வரிசைகளைப் போன்று மண்ணெண்ணெய்க்காகவும் மக்கள் தொடர்ந்தும் வரிசைகளில் காத்திருக்கும் சந்தர்ப்பங்களும் இடம்பெற்றுள்ளன.

தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam
அப்பாவின் கார்பன் காப்பி... ஜாய் கிறிஸில்டாவின் புதிய பதிவு! சிக்கப்போகும் மாதம்பட்டி ரங்கராஜ் Manithan
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
புடின் - ட்ரம்ப் சந்திப்பு தேவை இல்லை... உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா முன்வைக்கும் யோசனை News Lankasri