லண்டனில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற அன்னை பூபதியின் 37ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
1988 ஆம் ஆண்டு தமிழீழத்தை ஆக்கிரமித்திருந்த இந்திய இராணுவத்தை வெளியேறக்கோரி உணவு தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு தனது உயிரைத் தியாகம் செய்த அன்னை பூபதியின் 37 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு லண்டனில் நடைபெற்றுள்ளது.
இந்த நினைவேந்தல் நிகழ்வு நாடு கடந்த தமிழீழ அரசாங்க பிரித்தானிய கிளையின் ஒழுங்கமைப்பில் லண்டனில் ஈழத்தமிழ் மக்கள் செறிந்து வாழும் ஈஸ்ட் ஹாம் பகுதியில் இன்றையதினம் (19) இடம்பெற்றுள்ளது.
நினைவேந்தல் நிகழ்வு
நாடுகடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர் யோகன் ரட்ணம் பொதுச்சுடரினை ஏற்றி ஆரம்பித்துவைத்தார்.

இந் நிகழ்வில் நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரித்தானிய செயற்பாட்டாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு நிகழ்வேந்தல் செய்தனர்.
1988 ஆம் ஆண்டு தமிழீழத்தை ஆக்கிரமித்திருந்த இந்திய இராணுவத்தை வெளியேறக்கோரி இரண்டு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் முன்றலில் சாகும்வரையிலான உணவு தவிர்ப்பு அகிம்சைப் போராட்டத்தை அன்னை பூபதி மேற்கொண்டு தனது உயிரைத் தியாகம் செய்திருந்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri