தமிழர் தாயகத்தின் விடிவுக்காய் தன்னுயிர் ஈந்த அன்னை பூபதியின் 35ஆவது ஆண்டு நினைவு தினம்(Video)
தமிழர்களின் வரலாறு தியாகத்தினாலும் உரிமைப்போராட்டங்களினாலும் பதிவுசெய்யப்பட்டது. அந்த பதிவுகள் காலத்தை கடந்தும் அடக்குமுறைகளுக்கு அப்பாலும் தமக்கான நிகழ்த்துகைகளை நேர்நிறுத்திக்கொள்ளும் அவ்வாறான ஒரு பதிவாக தனது பெயரையும் தமிழர் வரலாற்றில் பதிவு செய்து தன்னையும் அர்ப்பணித்த தியாகத்தின் அதியுயர் வடிவம்தான் அன்னை பூபதி.
இனமொன்றின் தேசிய விடுதலைக்காகவும் அடுக்குமுறை இராணுவங்களின் அடாவடிகளுக்கெதிராகவும் உண்ணாவிரதமிருந்து உயிர்துறந்த தியாகத்தாய் அன்னை பூபதியின் 35 வது ஆண்டு நிறை நினைவுதினம் இன்றாகும்.
1988ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் திகதி மட்டக்களப்பில் அகிம்சைப்போர்வை போர்த்தி உலக அரங்கில் நடித்துக்கொண்டிருந்த நாட்டின் முகத்திரையை கிழிக்க பத்துப்பிள்ளைகளின் தாயொருவரான அன்னை பூபதி தயாரானா.
இந்தியப் படைகள் உடனடியாகப் போர் நிறுத்தத்தை மேற்கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சுக்களின் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அன்றைய மட்டு அம்பாறை அன்னையர் முன்னணியின் சார்பில் பூபதி கணபதிப்பிள்ளை அவர்கள் அகிம்சை வழியில் உண்ணா நோன்பிருக்கத்தயாரானார்.
எமது நோக்கை நாம் அடைவோம் ஒருபோதும் அன்னையர் முன்னணி தளராது - என்ற வார்த்தைகளோடு அன்னை பூபதி தனது உண்ணாவிரத்த்தை ஆரம்பித்தார். இவ்வாறு தனது தியாக வேள்வியை ஆரம்பித்த அஎன்னை பூபதி முப்பத்தியொரு நீண்ட இராப்பகல்களின் பின்னர் ஏப்ரல் 19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 8. 45 மணியளவில் தான் நேசித்த மண்ணில் சுதந்திரத்திற்காக ஏங்கிய தனது மூச்சை நிறுத்திக்கொண்டார்.
தான் நேசித்த தாயக மண்ணை அக்கிரமங்களால் லங்கோலம் பூண்டிருந்த இந்திய இராணுவங்களின் கெடுபிடிகளில் இருந்து காக்க அகிம்சைக்களமாடிய களமாடிய தாயாய் தமிழர் வரலாற்றினுடைய வலி சுமந்த்பக்கங்களில் வலிகளோடான ஒரு வரலாறாக தன்னையும் குறித்துக்கொள்ளும்படியாக உண்ணா நோன்பிருந்து உலக நாடுகளுக்கோர் செய்தியை மிகவும் அழுத்தமாக உரத்து சொல்லும்படியாக தனதின்னுயிரை மாய்த்துக்கொண்டார்.
இவ்வாறு தாயகம் காக்க தன்னுயிர் ஈந்த அன்னை பூபதியின் 35ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.

விஜய் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாக போகும் பழைய ஹிட் சீரியல்கள்.. எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

பாகிஸ்தான், சீனாவிற்கு கெட்ட செய்தி... இந்திய ஆயுதப் படை சொந்தமாக்கவிருக்கும் ஆபத்தான ட்ரோன் News Lankasri

வெறும் 4 துணிகள் தான் உள்ளது, அப்பா, அம்மா இல்லாமல்.. சரிகமப சீசன் 5 மேடையில் கண்ணீர்விட்ட இலங்கை பெண் சினேகா Cineulagam
