பொது பாதுகாப்பு அமைச்சரின் பதவிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்..!
பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தனது பதவியில் இருந்து விலக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, சட்டம் மற்றும் ஒழுங்கைப் பேணுவதில் பொது பாதுகாப்பு அமைச்சர் தனது கடமைகளில் இருந்து தவறிவிட்டார் என்பதற்கான தெளிவான சான்றாக சமீபத்திய கொலைகள் உள்ளன எனவும், அமைச்சரை பதவி விலகுமாறும் தயாசிறி ஜெயசேகர கோரியுள்ளார்.
"எந்தவொரு அமைச்சரும் பதவியேற்றவுடன் தனக்கு ஒதுக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்றுவதாக உறுதியளிக்கிறார். தனது அமைச்சகத்தின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களையும் திறம்பட நிர்வகிப்பதற்கும் அவர் பொறுப்பு.
டான் பிரியசாத்தின் கொலை
எனவே, தற்போதைய சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர், இந்தக் கடமைகளில் தவறிவிட்டார். அதன்படி, அவர் பதவியில் இருந்து விலக வேண்டும்” என்று தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன், "கடந்த சில வாரங்களில் 31 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன, மேலும் சுமார் 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அரசியல் ஆர்வலர்கள் உட்பட மக்கள் ஆபத்தான விகிதத்தில் கொல்லப்படுகிறார்கள்” என தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இலங்கை பொதுஜன பெரமுனவின் அரசியல் (SLPP) செயற்பாட்டாளர் டான் பிரியசாத்தின் அண்மைய படுகொலையைக் சுட்டிக்காட்டி, சமீபத்திய கொலைகளுக்கு பொறுப்பு பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளே என்றும் தயாசிறி சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தலைக்கவசம் அணிந்திருக்கும் ஒவ்வொரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநரையும் சோதனைக்கு உட்படுத்துவது குற்றங்களைத் தடுப்பதற்கான ஒரு பயனுள்ள வழியாக இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
