இறுதி முடிவுகள் வெளியாகும் தருணம்! தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் விடுத்துள்ள கோரிக்கை
ஜனாதிபதி தேர்தலின் இறுதி முடிவுகள் வெளியான பின்னரும் மக்கள் அமைதியாகச் செயற்படுமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை தேர்தலின் போது அமைதியான முறையில் செயற்பட்ட மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஏனைய தேர்தல்களுடன் ஒப்பிடும் போது இந்த ஜனாதிபதி தேர்தலில் பாரதூரமான வன்முறைச் சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லையெனவும் இது திருப்திகரமாகவுள்ளதெனவும் தெரிவித்துள்ளார்.
வன்முறைச் சம்பவங்கள்
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்று இறுதி முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இந்த முதல் சுற்றில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில் உள்ளார்.

இதேவேளை இன்னும் சில மணி நேரங்களில் ஜனாதிபதி தேர்தலின் இறுதி முடிவுகளை அறிவிக்கும் நடவடிக்கையை தேர்தல் ஆணையகம் முன்னெடுத்து வருகின்றது.
இந்நிலையிலே தொடர்ந்தும் அமைதியாக செயற்பட்டு தேர்தல் முடிவுகளை அறிந்துகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam