வவுனியாவில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு
வவுனியா - நாவற்குளம் பகுதியில் அமைந்துள்ள நீர் நிலை ஒன்றிலிருந்து முதியவர் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலமானது, இன்றைய தினம் (05.03.2024) மீட்கப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரிய வருகையில், கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் கற்குவாரி ஒன்றில் சடலம் கிடக்கின்றமை தொடர்பாக அப் பகுதி மக்கள் ஓமந்தை பொலிஸபருக்கு தகவல்தெரிவித்துள்ளனர்.
உடற்கூற்று பரிசோதனை
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதன்போது, சடலம் அழுகிய நிலையில் காணப்பட்டதனால் குறி்த்த நபர் சில தினங்களிற்கு முன்னதாகவே இறந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஓமந்தை பொலிசார் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஜேவிபி மீண்டும் தன்னை அம்பலப்படுத்தி விட்டது 8 மணி நேரம் முன்

டிஆர்பி முதல் இடத்தை பிடித்த ஹிட் சீரியல், கீழ் இறங்கிய சிங்கப்பெண்ணே.. டாப் 5 சீரியல்களின் விவரம் Cineulagam

இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் பயன்படுத்திய ஆயுதங்கள்... பதிலளிக்க மறுத்த சீன இராணுவம் News Lankasri

திருமணத்துக்கு முன் காதல் மன்னர்களாக திகழும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
