சர்வதேச அளவில் அபார சாதனை படைத்த யாழ். இளைஞன்: சிறீதரன் எம்.பி வாழ்த்து
சர்வதேச மற்றும் தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டிகளில் அபார சாதனைகளை படைத்த யாழ். இளைஞனுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தென்மராட்சியைச் சேர்ந்த சற்குணராசா புசாந்தன், அண்மையில் மலேசியாவில் நடைபெற்ற ஆசிய கிளாசிக் பவர்லிஃப்டிங் சம்பியன்ஷிப் பளுதூக்கல் போட்டியில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார்.
புதிய சாதனை
அதேவேளை, அவர் பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற தேசிய ரீதியிலான பளுதூக்கல் போட்டியில் கலந்து கொண்டு, மூன்று பிரிவுகளிலும் பங்கேற்று மூன்று தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளார்.

இந்நிலையில், 120 கிலோகிராமிற்கு மேற்பட்டோருக்கான பிரிவில் கலந்து கொண்டு, squat பிரிவில் 330 கிலோகிராமையும் bench press பிரிவில் 175 கிலோகிராமையும், deadlift பிரிவில் 261 கிலோகிராமையும் தூக்கி வெற்றி பெற்றுள்ளதோடு, குறித்த போட்டியில் மொத்தமாக 766 கிலோகிராமை தூக்கி புதிய சாதனையை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 7 மணி நேரம் முன்
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan