28 விமான நிலைய அதிகாரிகளுக்கு கட்டாய விடுமுறை
விமான நிலைய கூட்டு நிபுணத்துவ தொழிற்சங்க தலைவர் உட்பட 28 அதிகாரிகளை விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் தனியார் நிறுவனம் கட்டாய விடுமுறை வழங்கி அனுப்பியுள்ளது.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சேவைகளை சீர்குலைக்கும் நோக்கத்துடன் குறித்த தொழிற்சங்கத்தின் செயலாளர் ஜனவரி 2 ஆம் திகதி இலங்கையில் விமானப் பயண சேவைகளை வழங்கும் விமான நிறுவனங்களுக்கும் சிவில் விமானப் போக்குவரத்து பணிப்பாளர் நாயகத்திற்கும் அனுப்பியதாக கூறப்படும் கடிதத்தை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேவையற்ற நடவடிக்கை
இது சட்ட மற்றும் தார்மீக நியாயம் இல்லாத தேவையற்ற நடவடிக்கை என்று கருதிய நிறுவனத்தலைவர், முறையான விசாரணை அடிப்படையில் குறித்த 28பேரையும் உடனடியாக கட்டாய விடுப்பில் அனுப்பும் முடிவை செயற்படுத்தினார்.
விசாரணைகள் முடியும் வரை விமான நிலையம் மற்றும் விமான நிறுவனங்களின் எந்தவொரு வளாகத்திற்கும் இந்த அதிகாரிகள் அணுகுவது தடைசெய்யப்படும் என்று நிறுவனத்தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும்: போர் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாக டிரம்ப் அறிவிப்பு News Lankasri