இலங்கையை வந்தடைந்த போர்க்கப்பல்!
இந்தோனேசிய கடற்படைக்குச் சொந்தமான 'KRI BUNG TOMO - 357' என்ற போர்க்கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளது.
இந்த போர்க்கப்பல் நேற்று (16) கொழும்பு துறைமுகத்திற்கு சிநேகபூர்வ விஜயத்திற்காக வந்தடைந்தது.
குறித்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு ஏற்ப வரவேற்றுள்ளனர்.
போர்க்கப்பல்
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள Multirole Light Frigate ரக ‘KRI BUNG TOMO - 357’ போர்க்கப்பல் 95 மீட்டர் நீளமும் கொண்டது.
இந்த கப்பல், மொத்தம் 111 உறுப்பினர்களை உள்ளடக்கியதுடன், கப்பலின் கட்டளை அதிகாரியாக் கெப்டன் (N) DEDI GUNAWAN WIDYATMOKO கடமையாற்றுகின்றார் என கூறப்பட்டுள்ளது.
இந்த போர்க்கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், கொழும்பில் உள்ள கவர்ச்சிகரமான சுற்றுலா தலங்களை பார்வையிட திட்டமிடப்பட்டிருந்தது.
மேலும் நட்புரீதியான விஜயத்தின் பின்னர், 'KRI BUNG TOMO - 357' கப்பல் இன்று இலங்கையிலிருந்து புறப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
