விலை போகிறதா RCB..! களத்தில் குதித்த அமெரிக்க கோடீஸ்வரர்
இந்தியன் பிரீமியர் லீக்(IPL) கிரிக்கெட் அணிகளின் பெரும்பான்மை பங்குகளைக் கைப்பற்ற அமெரிக்க கோடீஸ்வரர் டேவிட் பிளிட்சர் (David Blitzer) ஆர்வம் காட்டி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது உலகளாவிய முதலீட்டாளர்களிடையே ஒரு பாரிய ஏலப் போரை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நடப்பு சாம்பியனான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) ஆகிய அணிகளின் பங்குகளை வாங்க பிளிட்சர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
கிரிக்கட் அணி ஏலம்
கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற RCB அணியின் மதிப்பு சுமார் 1.8 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. பிளிட்சருடன் சேர்ந்து மான்செஸ்டர் யுனைடெட் உரிமையாளர் அவ்ராம் கிளேசர், அதார் பூனவல்லா மற்றும் ரஞ்சன் பை போன்ற இந்திய தொழிலதிபர்களும் இந்த ஏலத்தில் கலந்து கொள்கிறார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் தொடரின் ஒட்டுமொத்த மதிப்பு கடந்த ஆண்டு 18.5 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, பிளாக்ஸ்டோன் (Blackstone) மற்றும் KKR போன்ற பெரிய முதலீட்டு நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வருகின்றன.
இறுதி ஏலத்திற்கான காலக்கெடு மார்ச் மாத நடுப்பகுதியில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய ஐபிஎல் பருவம் மார்ச் 26 அன்று தொடங்கவுள்ளது. இதில் மொத்தம் 84 போட்டிகள் நடைபெறவுள்ளன.
எந்தவொரு ஒப்பந்தமும் இறுதி செய்யப்படுவதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) அனுமதி அவசியமாகும்.

இறக்குமதி செய்யப்பட்ட ரசாயனம் சேப்பாக்கம் மைதானத்தில் தெளிப்பு! வாழ்வா சாவா போராட்டத்தில் இந்தியா News Lankasri