அம்பாறையில் ஆடை விற்பனை கடையில் தீ விபத்து
அம்பாறை - தம்பிலுவில நகரின் பிரதான வீதியில் அமைந்திருந்த புடவைக்கடை முற்றாக தீக்கிரையாகியுள்ளது.
குறித்த சம்பவம் இன்றைய தினம் (23.03.2023) அதிகாலையளவில் இடம்பெற்றுள்ளது.
தீப்பரவல் தொடர்பில் அக்கரைப்பற்று மாநகரசபையின் தீயணைப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
தகவலறிந்த தீயணைப்புப் பிரிவினர் மற்றும் பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
எனினும் கடை முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.
மேலும் தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.