இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட ஒருதொகை மஞ்சள் மீட்பு
இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட 20ஆயிரம் கிலோ மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது.
காலி ஹங்கம கலமண்டிய மீன்பிடித் துறைமுகத்துக்கு அருகில் உள்ள இடம் ஒன்றில் வைத்து இந்த மஞ்சள் தொகை கைப்பற்றப்பட்டதாகச் சிறப்பு அதிரடிப்படையினர் அறிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் மஞ்சளின் இறக்குமதிக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவிலிருந்து தொடர்ந்தும் சட்டவிரோதமாக மஞ்சள் கடத்தி வரப்படுகின்ற சம்பவங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டில் மஞ்சள் உற்பத்தியை ஊக்குவிக்கும் முகமாகவே மஞ்சளின் இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறிவருகிறது.
எனினும் உள்ளூர் சந்தையில் மஞ்சளுக்குத் தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவி வருவதாக பாவனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.