கடன் கிடைக்கும் வரை இந்தியா இலங்கைக்கு வழங்கிய மிகப் பெரும் உதவி! அமைச்சரிடம் கையளிப்பு
இலங்கைக்கு தேவையான எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு இந்தியா 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளது.
அந்த கடனுதவியை வழங்கும் வரை இலங்கை எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய 40 ஆயிரம் மெற்றி தொன் டீசலை இந்தியா வழங்கியுள்ளதுடன் அது இன்று கொழும்பு துறைமுகத்தில் வைத்து எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிடம் (Udya Gammanpila) கையளிக்கப்பட்டது.
ஸ்வர்ன புஷ்ப கப்பலில், கொண்டு வரப்பட்ட டீசல் தொகையை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே,(Gopal Baglay) அமைச்சரிடம் கையளித்துள்ளார்.
இந்த நிகழ்வில் துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தனவும் கலந்துக்கொண்டுள்ளார்.