ஹொங்கொங்கில் இருந்து வெளியேறுகிறது சர்வதேச மன்னிப்புச்சபை
சீனாவின் ஆளுகைக்கு உட்பட்ட ஹொங்கொங்கில் இருந்து சர்வதேச மன்னிப்புச்சபை வெளியேறுகிறது.
ஹொங்கொங்கில் அண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்ட தேசிய பாதுகாப்புச் சட்டத்தை அடுத்தே இந்த முடிவை சர்வதே மன்னிப்புச்சபை எடுத்துள்ளது,
சீன நிர்வாகத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த சட்டத்தின்கீழ் தமது அலுவலகங்களை அங்கு வைத்திருக்கமுடியாது.
எனவே ஹொங்கொங்கில் உள்ள இரண்டு அலுவலகங்களையும் மூடிவிடப்போவதாக சர்வதே மன்னிப்புச்சபை குறிப்பிட்டுள்ளது.
ஹொங்கொங்கில் கடந்த 40 வருடங்களாக சர்வதே மன்னிப்புச்சபை அலுவலகப்பணிகளி்ல் ஈடுபட்டு வருகிறது.
இந்தநிலையில் ஹொங்கொங்கில் அமைந்துள்ள உள்ளூர் அலுவலகம் எதிா்வரும் 31ஆம் திகதியன்று மூடப்படவுள்ளது. பிராந்திய அலுவலகம் இந்த வருட இறுதியில் மூடப்படவுள்ளது.
சீனாவின் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் நாசவேலை, பயங்கரவாதம் மற்றும்
வெளிநாட்டுப்படைகளுடன் கூட்டுச்சேர்தல் என்பன குற்றமாகக் கருதப்படுகின்றன.