ரஷ்யாவின் மற்றுமொரு தாக்குதல்! உக்ரைனில் காற்றில் கலக்கும் விஷ வாயு
உக்ரைனில் உலகின் மிகப்பெரிய அம்மோனியா குழாய் வெடித்து விஷ வாயு காற்றில் கலப்பதாக தகவலொன்று வெளியாகியுள்ளது.
உக்ரைனின் கார்கிவ் பிராந்தியத்தில் அமைந்துள்ள Masiutovka கிராமத்தில் செல்லும் குழாய் வெடித்து அப்பகுதி எங்கும் மேக மூட்டமாக வாயு காற்றில் கலப்பது காணொளி ஒன்றில் வெளியாகியுள்ளது.
அம்மோனியா குழாய் வெடிப்பு
ரஷ்யாவின் வெடிகுண்டு தாக்குதல் காரணமாக குறித்த குழாய் வெடிப்பு நேர்ந்திருக்கலாம் என்று கருதப்படுகின்றது.
ரஷ்யாவின் Togliatti பகுதியில் இருந்து 1,534 மைல்கள் அளவுக்கு இந்த அம்மோனியா குழாய் விரிவடைந்து காணப்படுகிறது.
அதுமட்டுமின்றி வோல்கா நதி ஊடாக மூன்று கருங்கடல் துறைமுகங்களையும் இணைக்கிறது.
இரு நாடுகளின் குற்றச்சாட்டு
தெற்கு உக்ரைனில் டினீப்பர் நதியில் அமைந்துள்ள நோவா ககோவ்கா அணையை சேதப்படுத்திய விவகாரம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இரு நாடுகளும் ஒருவருக்கு ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
தற்போதும் அம்மோனியா குழாய் வெடித்த விவகாரத்திலும் இரு நாடுகளும் ஒருவருக்கு ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்துக்கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ஈழத் தமிழர் இனி செய்யவேண்டியது என்ன! 3 மணி நேரம் முன்

அஜித்தின் AK 64 படத்தில் இணையும் சூப்பர் ஸ்டார்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் பெரிய ட்ரீட் Cineulagam

பெட்ரோல் நிலையத்தில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல.., நீதிமன்றம் உத்தரவு News Lankasri
