உக்ரைனின் மற்றுமொரு முக்கிய நகரை கைப்பற்றிய ரஷ்யா
கிழக்கு உக்ரைனில் உள்ள சோலேடார் நகரை ரஷ்ய படைகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கிழக்கு உக்ரைனின் டொனெட்ஸ்க் மாகாணத்தில் சுரங்க நகரம் என்று அழைக்கப்படும் சோலேடாரை ரஷ்ய படைகள் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த நகரை ரஷ்யா கைப்பற்றியதன் மூலம் உக்ரைனிய துருப்புகளை அருகே உள்ள மிகப்பெரிய நகரான பாக்முட்டிலில்(Bakhmut) இருந்து துண்டிக்க அனுமதிக்கும் என்றும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் உக்ரைன் அதிகாரிகள் மாஸ்கோவின் அறிவிப்பினை மறுத்துள்ளதுடன், அங்கு சண்டை தொடர்வதாகவும் தெரிவித்துள்ளனர்.