யாழில் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கி வந்த அம்மாச்சி உணவகம் பூட்டு!
பலாலி வீதி - திருநெல்வேலியில் அமைந்துள்ள அம்மாச்சி உணவகம் தொடர்ந்து சுகாதார சீர் கேட்டுகளுடன் இயங்கி வருவதால் உணவகத்தின் குறைபாடுகள் அனைத்தையும் நிவர்த்தி செய்ய பின்னர் மீள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம்(20.05.2026) பொது சுகாதார பரிசோதகர்களினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் பின்னரே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உணவகம் பூட்டு
பலாலி வீதி - திருநெல்வேலியில் அமைந்துள்ள அம்மாச்சி உணவகம் சுகாதார சீர் கேடுகளுடன் இயங்கி வருவதாக திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவனிற்கு தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதனைத் தொடர்ந்து, நேற்று முன்தினம்(20) பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவன் தலைமையிலான குழுவினரால் அம்மாச்சி உணவகம் பரிசோதிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, பொது சுகாதார பரிசோதகரால் ஏற்கனவே வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை மீறி சுகாதார சீர் கேட்டுடன் தொடர்ந்து உணவகம் இயங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவனால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களின்படி, உணவகத்தின் குறைபாடுகள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்படும் வரை உணவகம் தற்காலிகமாக பூட்டப்பட்டுள்ளது.
அத்துடன், அம்மாச்சி உணவகத்தில் உணவு கையாள்வோருக்கான விழிப்புணர்வு செயற்பாடும் நேற்றையதினம்(21) பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவனால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.