திருமலையை இலக்கு வைத்து அமெரிக்காவின் இரகசிய திட்டம் - இந்தியாவிற்கு பகிரங்க எச்சரிக்கை
பங்களாதேஷில் தற்போது போராட்டம் வெடித்து நாட்டில் கொதிநிலை ஏற்பட்டுள்ளது.
இதனை கையாளக்கூடிய இடத்தில் பாகிஸ்தான் இருக்கின்றது.
பாகிஸ்தானை நேரடியாக முகாமை செய்யக்கூடிய இடத்தில் அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவின் விமானங்கள் இலங்கையின் வடக்கு -கிழக்காகவும் மற்றும் முழுவதுமாக பேரிடர் என்ற பெயரில் பெரும் நகர்வுகளை மேற்கொண்டு சென்றுள்ளன.
இதனால் தற்போது இந்தியா அதனை பெரிதாக கண்காணிப்பதாக தெரிகின்றது.
இந்தநிலையில், இந்தியா,சீனா,ரஸ்யா சேர்ந்து அமெரிக்க டொலருக்கு எதிராகவும் புதிய நாணயத்தை உருவாக்கினால் இந்தியா மீது அமெரிக்கா நடவடிக்கை எடுக்கும் என்று பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இலங்கையினுடை தந்திரோபாய இடஅமைவு எல்லா நாட்டிற்கும் தேவையாக உள்ளது எனவும் குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி...
எனது நகரத்திற்குள் அமெரிக்க அதிகாரிகளுக்கு அனுமதி இல்லை: கிண்டலுக்குள்ளான கனேடிய மேயர் News Lankasri