ஹோர்முஸ் நீரிணையை மீட்க அமெரிக்காவின் அதிரடி திட்டம்
ஈரான் உடனான போர் நீடிப்பதால் அமெரிக்காவில் எரிபொருள் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளதுடன், உரத் தட்டுப்பாட்டால் விவசாயிகளும் பெரும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.
இதனால், ஜனாதிபதி ட்ரம்பின் மக்கள் செல்வாக்கு அவரது இரண்டாவது பதவிக்காலத்தில் மிகக் குறைந்த நிலையை எட்டியுள்ளது.
இந்த உள்நாட்டு அதிருப்தியைச் சமாளிக்கவும், உலகப் பொருளாதாரத்தை முடக்கியுள்ள ஹோர்முஸ் நீரிணை முடக்கத்தை உடைக்கவும் 'புராஜெக்ட் ஃப்ரீடம்' என்ற புதிய திட்டத்தை அமெரிக்கா தொடங்கியுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறந்து, வணிகக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்போவதாக பென்டகன் அறிவித்துள்ளது.
வலுக்கட்டாயமாகத் திறக்க முயற்சி
ஏற்கனவே இரண்டு கப்பல்கள் வெற்றிகரமாகப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள அமெரிக்கா, இனி மற்ற கப்பல்களும் அச்சமின்றி வரலாம் எனத் தூது அனுப்பியுள்ளது.

இருப்பினும், அமெரிக்காவின் இந்தத் தற்காலிகப் பாதுகாப்பு ஏற்பாட்டை சர்வதேச கப்பல் நிறுவனங்களும், காப்பீட்டு நிறுவனங்களும் எந்தளவுக்கு நம்பும் என்பது இன்னும் சந்தேகமாகவே உள்ளது.
ஹோர்முஸ் நீரிணையை வலுக்கட்டாயமாகத் திறக்கும் முயற்சி என்பது மிக அபாயகரமானது என இராணுவ வல்லுநர்கள் எச்சரித்து வரும் சூழலில், காப்பீட்டு நிறுவனங்கள் இந்தக் கடல்வழிப் பயணத்திற்குப் பெரும் சவாலாக உள்ளன.
அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலர் ஹெக்செத், இது ஒரு தற்காலிக நடவடிக்கை என்றும், போர் நின்ற பிறகு உலக நாடுகள் இப்பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
எனினும், போர்ச் சூழல் முழுமையாக முடிவுக்கு வராமல் மற்ற நாடுகள் இதில் இணையப் போவதில்லை என்பதால், அமெரிக்காவின் இந்த 'புராஜெக்ட் ஃப்ரீடம்' எந்தளவுக்கு நீடிக்கும் என்பது எதிர்வரும் நாட்களில் தெரியவரும்.
3 எம்.எல்.ஏக்கள் ஒரே குடும்பத்தில்.,அரசியலில் கால்பதிக்கும் லாட்டரி மார்டின் குடும்பம் News Lankasri